Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு ₹1 கோடி நன்கொடை வழங்கிய பனிமலர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள்; முதலமைச்சர் விஜயை சந்தித்தனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களிடம் வழங்கும் பனிமலர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை பனிமலர் பொறியியல் கல்லூரியின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை வழங்கினர்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்

காமன்வெல்த் விளையாட்டு 2026 ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து, போக்குவரத்து துறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய நியூஸ்18 நெட்வொர்க் நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் நியூஸ்18 நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் ஜோஷி உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டைம்ஸ் ஆப் இந்தியா குழும நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சேத்துப்பட்டு Bio-CNG ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்; குப்பைகளை முழுமையாக எரிவாயு, உரமாக மாற்ற உத்தரவு

சென்னை சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு (Bio-CNG) ஆலையை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாநகரில் உருவாகும் குப்பைகளை முழுமையாக தரம் பிரித்து எரிவாயு, உரம் மற்றும் மாற்று எரிபொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.