முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடத்தி, “போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்” விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையிலான கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகள்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த பொருளாதார நிபுணர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, இந்தியப் பொருளாதார நிபுணரும் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்

விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் பாட அரசினர் தனித் தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி “திறன் 2026” பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற “திறன் 2026” பயிலரங்கத்தை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். தமிழில் மருத்துவப் பாடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர். தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் […]
அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்களுடன் 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை

தமிழ்நாடு முழுவதும், டெல்டா மாவட்டங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாய்வு செய்த நிகழ்வின் புகைப்படம்.