முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார்

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மக்களுக்கு சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

தியாகிகளையும் தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தினமலர் நாளிதழ் நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தினமலர் நாளிதழின் பல்வேறு பதிப்புகளின் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், இணை ஆசிரியர் மற்றும் இயக்குநர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக்க வேண்டும்; பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.