Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.

இந்த புதிய நடைமுறையின் மூலம், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்வதில் இணையவழி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பதிவுத்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கான ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்