சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.
புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் சென்னை ஓபன் WTA-250 மகளிர் டென்னிஸ் போட்டி குறித்து விஜய் அமிர்தராஜ் ஆலோசனை

2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் டாக்டர் N. மரிய வில்சன்

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைச்சர் டாக்டர் என். மேரி வில்சன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விசார் தேவைகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து, போக்குவரத்து துறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய நியூஸ்18 நெட்வொர்க் நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் நியூஸ்18 நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் ஜோஷி உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டைம்ஸ் ஆப் இந்தியா குழும நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.