Skip to main content

Tamilaga Vettri Kazhagam

2026 சென்னை ஓபன் WTA-250 மகளிர் டென்னிஸ் போட்டி குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (04.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் திரு. விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர் திரு. ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. பி. பிரசாந்த் மற்றும் கௌரவ செயலாளர் திரு. ந. வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பின்போது, 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்