முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடி வழங்கிய Stan Ventures

Stan Ventures குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான ஆர். பிரதீப் குமார், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் ₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
₹112.85 கோடியில் முடிவுற்ற 4 திட்டங்களை திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹112.85 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் சாகுபடி குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தென்மேற்குப் பருவமழை நிலவரம், மாவட்டங்களின் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மாத்ருபூமி குழும நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஊடகம் மற்றும் மாநில வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடினர்.
மலையாள மனோரமா குழும நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் ஜேக்கப் மேத்யூ தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஊடகம் மற்றும் பொதுநலத் தகவல் பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாடினர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதலமைச்சர் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். சௌமியா, முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.