₹112.85 கோடியில் முடிவுற்ற 4 திட்டங்களை திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹112.85 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் (17.07.2026), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூக நீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான வசதிகளை மேலும் மேம்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர்களின் நலன் மற்றும் தரமான தங்கும் சூழலை உறுதி செய்யும் நோக்கில் சமூக நீதி விடுதிகளில் தொடர்ந்து […]
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பேசினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் இன்று (17.07.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.