
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் (17.07.2026), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூக நீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான வசதிகளை மேலும் மேம்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மாணவர்களின் நலன் மற்றும் தரமான தங்கும் சூழலை உறுதி செய்யும் நோக்கில் சமூக நீதி விடுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.