
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
தென் மண்டலக் குழுக் கூட்டம் மத்திய அரசு மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்கும் முக்கியமான தளமாக அமைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.