Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக்க வேண்டும்; பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை இடங்களை 543 ஆக நிரந்தரமாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்

விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் பாட அரசினர் தனித் தீர்மானம்

“தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர். தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் […]

அமைச்சர் ர. வினோத் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற அமைச்சர் ர. வினோத்

2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.