Skip to main content

Tamilaga Vettri Kazhagam

“தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
“தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.08.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை முதலில் கட்டாயமாகப் பாட வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தையும் போற்றும் வகையில், அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” உரிய மரியாதையுடன் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அரசினர் தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்