Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக்க வேண்டும்; பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை இடங்களை 543 ஆக நிரந்தரமாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் பாட அரசினர் தனித் தீர்மானம்

“தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.