
அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள் இன்று (09.08.2026) மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டிய CTR நிர்மல் குமார், அவர்கள் தங்களது கல்வி அறிவையும் திறமைகளையும் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.