Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அமைச்சர் என். ஆனந்த் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்

சென்னையில் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் K.G. அருண்ராஜ்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்புப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் N. ஆனந்த்

சென்னை கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் மற்றும் பராமரிக்கும் சிறப்புப் பணிகளை கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். பஸ்ஸி ஆனந்த்.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் மூன்று நாள் சிறப்புப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேடு அருகே கூவம் நதிப் பகுதியில் தொடங்கி வைத்தார்.

பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் பொதுச்செயலாளர் N. ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் பஸ்ஸி ஆனந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றார். இது தொடர்பான தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.