
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில் மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இல்லாத சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், காவிரி நீர் பகிர்வு தொடர்பான சட்ட ரீதியான அம்சங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.