மலையாள மனோரமா குழும நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜேக்கப் மேத்யூ, மலையாள மனோரமா குழுமம் மற்றும் மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செயல் ஆசிரியரும் இயக்குநருமான திரு. ஜெயந்த் மாமென் மேத்யூ, தி வீக் வார இதழின் தலைமை இணை ஆசிரியரும் இயக்குநருமான திரு. ரியாத் மேத்யூ மற்றும் மலையாள மனோரமா குழுமத்தின் ஆசிரியரும் இயக்குநருமான திரு. ஹர்ஷா மேத்யூ ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.