Skip to main content

Tamilaga Vettri Kazhagam

உலக புகைப்பட நாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து
உலக புகைப்பட நாளையொட்டி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து.

ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உலக புகைப்பட நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்!” என்று முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#CMJosephVijay #CMVijayNews

இந்தப் பக்கத்தை பகிருங்கள்