Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த காட்சி.

தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்களை, திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து கருணை அடிப்படையில் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை மனு வழங்கிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.டி.ஆர். நிர்மல் குமார்; நீதித்துறையை வலுப்படுத்த அரசு உறுதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு, வழக்குகளின் தேக்கத்தை குறைத்தல் மற்றும் விரைவான நீதி வழங்குவது அரசின் முன்னுரிமை எனத் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்ட சி.டி.ஆர். நிர்மல் குமார், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.