Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2,920 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில் Guidance Tamil Nadu மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் காட்சி.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இம்முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.