அமைச்சர் என். ஆனந்த் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் ₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் சென்னை ஓபன் WTA-250 மகளிர் டென்னிஸ் போட்டி குறித்து விஜய் அமிர்தராஜ் ஆலோசனை

2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.