
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 184வது கிழக்கு வட்டம் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ECR. பி. சரவணன் MLA அவர்கள் தலைமை தாங்கினார்.
184வது கிழக்கு வட்டக் கழகச் செயலாளர் திரு. OMR MM ஹரி (எ) டில்லிபாபு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இதில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.