
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி. சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி. சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை பனிமலர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கினர்.