
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன் மற்றும் செயல் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் கொள்முதல்) திரு. பி. செல்வராஜு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான காசோலையை காவேரி குழும மருத்துவமனையின் சார்பில் முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கினர்.