மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு. எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ். மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ். தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு. கே.ஆர். பிரமோத் மற்றும் பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.