
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (14.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் திருமதி உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் திரு. இரா. முத்துச்செல்வன், துணைப் பொது மேலாளர்கள் திரு. அ. சுதாகர் மற்றும் திரு. வே. சுரேஷ் குமார், உதவிப் பொது மேலாளர் திரு. கு. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.