
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் திரு. ஷிவ் அரூர், அரசியல் பிரிவு ஆசிரியர் திருமதி வசுதா வேணுகோபால், நிகழ்வுகள் பிரிவுத் தலைவர் திரு. ராகுல் ஷா மற்றும் கருத்துக்கணிப்பு நிபுணர் திரு. பிரதீப் குப்தா ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.