
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்திறனை மேம்படுத்துதல், துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.