முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார்

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மக்களுக்கு சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

தியாகிகளையும் தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.