கோயம்பேட்டில் 45 MLD மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்புப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் N. ஆனந்த்

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் மூன்று நாள் சிறப்புப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேடு அருகே கூவம் நதிப் பகுதியில் தொடங்கி வைத்தார்.